8/18/2006

சுபாஷ் ஒரு நினைவு

சுதந்திரப் போராளிகளுகளில் சிறந்த போராளி - இது மகாத்மா காந்தி நேதாஜி பற்றி கூறியது. தன்னை இந்திய தேசிய பார்ட்டியில் இணைத்துக்கொள்வதற்கு போது, சுபாஷ் சந்திர போஸ் திறமையான துடிப்பான இளைஞன். காந்தியின் அஹிம்சா வாதத்தில் மிகவும் வெறுத்துப் போன இவர், ஆசாத் ஹிந்து பாவ் ல் இணைந்து பிரிட்டிஷ் ஆர்மியை இரண்டாம் உலக்ப்போரில் தோற்கடிக்க முடிவு எடுத்தார். இந்த முயற்சி வெற்றி பெறாவிட்டாலும், சுதந்திரப் போராட்டத்தின் தவர்க்க முடியாத ஒரு இடத்தினைப் பெற்றார் சுபாஷ் சந்திர போஸ்.
'ஜெய் ஹிந்த்' - இதுதான் இவரது முழக்கம். இந்திய தேசத்தின் சுதந்திர உணர்ச்சியை மிகப் பெரிய அளவிற்கு தூண்டிவிட்டவர் இவர். பெங்காலி குடும்பத்தில் ஜனவரி 23, 1897ம் ஆண்டு கட்டாக், ஒரிச்சாவில் பிறந்த சுபாஷ் பதினாறு ஆண்டுகள் பிறந்த ஊரிலேயே வாழ்ந்தார்.
இவரது தந்தை ஜான்கிநாஹ்ட் போஸ் லாயராகப் பணி புரிந்தவர். பழமைவாதி. பப்ளிக் பிராசிக்யூட்டராகவும், பின்னர் பெங்கால் லெஜிஸ்லேடிவ் கவுண்சிலிலும் பங்கேற்றவர்.
எட்டு சகோதரர்கள், ஆறு சகோதரிகள் - சுபாஷின் குடும்பம் பெரியதுதான் ஆனாலும், கட்டுப்பாடாக வாழ்ந்து வந்தனர். சுபாஷ் படிப்பதிலும், கடவுள் தேடலிலும், தனிமனித ஒழுக்கத்திலும் ஈடுபாடுடையவர். சமூக சேவைகள் செய்து வந்தார். விவேகானந்தரின் எழுத்துகளைப் படித்த பிறகு, ஆதாயமில்லாத சேவையே இவரது லட்சியமாயிற்று!

சுபாஷ் சந்திரபோஸ், கல்லூரியிலிருந்து துரத்தப்பட்டதே இவரது வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட். தனது மகனின் திறமையை அறிந்த சுபாஷின் தந்தை, சுபாஸை இந்திய சிவில் சர்வீஸி இணைத்து பெரிய ஆளாக்க ஆசைப்பட்டார். சுபாஷ இங்கிலாந்திற்கு மேற்படிப்பிற்கு அனுப்பப்பட்டார். 1929 ம் ஆணடு நடைபெற்ற சிவில் சர்வீஸ் ஒபன் எக்ஸாமில் சுபாஷ நான்காவது இடத்தில் வந்தார். படிப்பில் மிகச் சுட்டியாக இருந்தாலும், சுபாஷ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார். காங்கிரஸ் பார்ட்டியில் இணைந்து இளைஞர் காங்கிரஸில் ஆர்வமுடன் ஈடுபாட்டார். இந்திய சிவில் சர்வீஸிலி இருந்து 1921ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

இந்தியா திரும்பியவுடன் காந்தியை சந்திக்கச் சென்றார். இவரது ஐடியாக்கள், காந்தியின் அகிம்சா தத்துவத்துடன் ஒத்துவர வில்லை.கல்கத்தா திரும்பி, சி.ஆ.தாஸ் என்ற பெங்காலி சுந்திரப்போராட்ட வீரருடன் இணைத்தார். 1921ம் ஆண்டு பிரிண்ஸ் வேல்ஸின் இந்தியப் பிரயாணம் குறித்த ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.
இதனால் சிறை சென்றார். 1924 ம் ஆண்டு புதிதாக உறுவாக்கப்பட்ட கல்கத்தா கார்பரேசனின் சி.இ.ஓ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதே வருடன், தீவிரவாதி என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். முதலில் அலிபூர் ஜெயிலிலும், பின்னர் மண்டாலே (பர்மா) ஜெயிலிலும் அவர் சிறை வைக்கப்பார். 1925ல் இவரது தலைவர் சி.ஆர்.தாஸ் மரணம் சுபாஷை மிகவும் பாதித்தது.

1926-ல் பெங்கால் அசம்பிளியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 1027ல் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பர்மா சிறை இவரது மனவுறுதியை அதிகப்படுத்தியிருந்தது.
1927-ல் போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு இருவரும் காங்கிரஸின் ஜெனரல் செக்ரட்டரியாக நியமிக்கப்பட்டனர். 1930ல் சுபாஷ் மீண்டும் அரஸ்ட் செய்யப்பட்டார். எட்டு மாத சிறை வாசத்திற்குப் பிறகு, கல்கத்தாவின் மேயரானார்.
1932ல் வியண்ணாவில் மருத்துவ காரணங்களுக்காக சென்றிருந்த போது, விதந்தாஸ் பட்டேலில் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.

பிர்ட்டனுக்கு எதிராக அனைத்து சக்திகளை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தினை அவர்கள் உணர்ந்தனர். ஒத்துழையாமை தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் ஒத்துழையாமை ஒரு போராட்டமாக அனைத்து பக்கங்களிலிருந்தும் வெடிக்க வேண்டும்". 1033ல் சுபாஷிடம் ஏராளமான பணம் மற்றும் சுந்திரப் போராட்டத்தின் எண்ணங்களையும் கொடுத்துவிட்டு, வித்தான் பட்டேல் மரணமடைந்தார்.

====
நேற்று சுபாஷ் சந்திரபோஸின் நினைவுநாள் என்று எங்கோ படித்தேன். இணையத்திலிருந்த ஒரு கட்டுரையினை சற்றே தமிழ்ப்படுத்தி பலகையில் கிறுக்கி வைக்கத்தோன்றியது. அதுதான் மேலே இருப்பது.

நன்றி: http://www.geocities.com/Athens/Atlantis/6304/nscb.html

3 comments:

ENNAR said...

இந்திய மாவீரனை இங்கு கொண்டு வந்தமைக்கு நன்றிபல வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்ல பதிவு-ங்க. உங்க வலைக்கு வந்ததுல சந்தோஷம்.

சுபாஷ் எப்டி இறந்தார்-ன்னே தெரியாது-ன்னுதான் படிச்ச மாதிரி ஞாபகம். அவரோட நினைவுநாள்-ன்னு ஒன்னு இருக்கா?

yata said...

நன்றி என்னார், சரவ்.