8/16/2006

தவறுகள் - அவமானங்கள்

தவறுகள் மனித இயல்பு.. உண்மைதான். ஆனாலும் இந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் எத்துணை மாறுதல்கள். சிலருக்கு தவறென்று படுவது, பல நேரங்களில் எதிராளிக்கு தவறாகத் தோன்றுவதில்லை. இந்த நிலையில், தான் விரும்பிய பெண்ணுக்கு மட்டும்தான் அத்தனையும் அழகு என்பது போல தனக்கு தவறென்று தோன்றுகிற ஒரே காரணத்திற்காக.. வாழ்க்கை முழுவதும் வருத்தப்படும் வித்ததில் அடுத்தவரை அவமானப்படுத்துபவர்கள் அதிகம்.

சிறு சிறு மின்னல்களாக உலகில் ஆங்காங்கே கிடைக்கும் பல சுகங்களையும் இப்படிப்பட்டவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். இதை விட கொடுமை இத்தகையவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் செய்த தவறை சொல்வதே இல்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் குழந்தைகளும் பெற்றோர்களும் தான். அப்பா அல்லது அம்மா அடிப்பார் என்று தெரிந்த பின்னரும் தான் செய்கின்ற தப்பைச் எத்தனைப் பிள்ளைகளால் தயங்காமல் சொல்ல முடியும்? முடிந்த வரை மறைக்கவே விரும்பும். இந்த சிறுவயது பழக்கம் காலத்திற்கும் தொடராமல் விடாது!

செய்த தவறை சொல்லத் தயங்குவது என்பதே தனி சப்ஜெக்ட். எதற்காகச் சொல்ல வேண்டும்? எவ்வள்வு தூரம் இதில் உதவி இருக்கிறது? இப்படியெல்லாம் பல வித கணிப்பிற்குப் பிறகே.. இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. செய்வது தவறாகவே இருந்தாலும், அல்லது செய்தது தவறாகவே இருந்தாலும், அதனைத் தவறு என்று ஒப்புக்கொள்வதே உலக மகாத் தவறு என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க..

இன்று படித்தது:

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை!

1 comment:

yata said...

மதுரா... கலக்கிட்டீங்க! ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. நன்றி.