2/08/2006

பிழைப்பைத் தேடி

கெட்டிக்காரன் பிழைப்பதற்காக எட்டு ஊருக்குச் செல்வான்.

நிச்சயம் கவனிக்க வேண்டிய கருத்துதான். ஒரு சிறு புன்னகையை வரவைக்கும், இதை படிப்பவர்கள் வெளிஊருக்கோ அல்லது முக்கியமாக வெளி நாட்டிற்கோ சென்று வேலைசெய்பவர்களாக இருந்தால்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லிய தமிழ் பரம்பரை, இது குறித்து பல காலங்களுக்கு முன்னரே தெளிவாகத்தான் இருந்திருக்கிறது. பட்டினத்தாரின் கதையாகட்டும், அல்லது காரைக்கால் அம்மையார் கதையாகட்டும், அல்லது முந்தைய சரித்திரமாகட்டும், எட்டு திக்கும் சென்று திரைகடலோடி திரவியம் தேடுபவர்கள் கெட்டிக்காரர்களாகத்தான் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைக்கும், ஒரு சிறுவன் வளரும் பருவத்திலேயே அவனை வெளிநாடு அனுப்பி வைக்கும் எண்ணத்துடன் வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டாலும், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால், இந்திய இளைஞன் தவறாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு அர்த்தம், தாய்நாட்டின் மீது பற்று இல்லாமல் என்பது அல்ல. இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை எல்லோருக்குமே அதிகம், அது மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் இளைஞர் மற்றும் இளைஞியர் பார்வையும் விசாலமாகிறது. இந்த விசாலமான பார்வை நாளைய இந்தியாவிற்கு கட்டாயம் உதவி செய்யும்.

No comments: