2/06/2006

உதவாக்கரை

மகனை ஒன்றுக்கும் உதவாதவனாக வளர்த்தால் திருடனாவான்.

- இன்று படித்த கருத்து இது. ம்... என்ன அர்த்தம் இதற்கு? வளர்ப்பது என்பது நம் கையில் இருப்பது போலத்தோன்றினாலும் வளர்வது என்பது சுற்றுப்புறம் மற்றும் நண்பர்கள் என்று முற்றிலும் அவர்கள் கையிலேயே தானே இருக்கிறது!

- நண்பர் ஒருவரின் பையனுக்கு நல்ல படிப்பும் வாழ்க்கைக்கான எல்லா உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார், ஆனாலும் அவன் திருடனானான். ஏன்? இது வளர்ப்பில் மட்டுமுள்ள குறைபாடல்ல.. அதனையும் தாண்டி ஏதோ ஒன்றிருக்கிறது.

- இந்த ஒரு கருத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் முக்கியமாக குழந்தைகள் இருப்பவர்களுக்கு சுருக்கென்று தோன்றுமா இல்லையா? ஒரு வேளை குறைந்த பட்ச கவனிப்பாகவது குழந்தைகளுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு கருத்து எழுதப்பட்டிருக்கிறதோ?

- பாபா படத்தில் ரஜினி ஏதோ ஒரு யோசனை செய்வது போல சில வரிகள் வரும். கிட்டத்தட்ட இதே கருத்துடன்.

- பாபா படத்தின் வசனகர்த்தா 'எஸ்.ரா' வாம். வலைப்பதிவுகளைப் படிக்கும் போது தெரிந்தது! எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள் பல அந்த படத்தில் இருந்தது. முக்கியமாக ரஜினியின் உள்மன நிலையை அப்படியே பிரதிபலித்த படம் அது.

No comments: