2/05/2006

கோழையும் எழுச்சியும்

கோழையை எழுச்சி பெறச் செய்தால் பேயோடும் போராடுவான்.

- அடேங்கப்பா, என்ன ஒரு அருமையான கருத்து இது. இதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வார்த்தை 'எழுச்சி'. அதுவும் கோழையின் எழுச்சி. கோழை என்றால் யார்? பயப்படுபவர்களை கோழை என்று சொல்வார்கள். எதற்கு பயப்படுபவர்கள், ஒரு செயலைச் செய்வதற்கோ அல்லது முன்னேற்றத்திற்கான போராட்டத்திலிருந்து விலகுபவர்களையோ கோழை என்பார்கள். ஆனால் இங்கு, கோழை ஒருவனை எழுச்சி பெறச் செய்தால், பேயோடு கூட போராடுவான் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பேய் என்பது மனித மனதின் ஆழமான ஒரு பயமாக முன் வைக்கப்படுகிறது. அதனோடே போராடக்கூடியவனாக ஒரு கோழை மாற முடியும் என்றால், எதனோடும் அவன் போராடுவான் என்பது பொருள்.

ஒருவேளை நாமே (நம்மையும் அறியாமல்) கோழையாக் இருந்தால் இதனை படிக்கும் போது நம்மிலும் எழுச்சி ஏற்படுவது போல ஒரு மாயை உருவாகுவது.. இந்த கருத்தின் வெற்றியோ?!

இத்தகைய எழுச்சியை கோழையாக இருக்கும் ஒருவனுக்கு உருவாக்குவது எவ்விதம்?

No comments: