9/04/2006

கொஞ்சம் தூக்கி விடலாம்!

"நம்ம சாதிக்காரப் பையந்தான். அதான் கொஞ்சம் தூக்கிவிடலாம்னு பார்க்கிறேன். என்ன சொல்றீங்க"
"எல்லாஞ்சரிதான் ஆனா ஒழுங்கா இருப்பானா?"
"அதெல்லாம் நல்ல பையங்க. இவன்.. இவங்கூட இருக்கிற பிரண்ட்ஸ் எல்லாம் சேந்து ஊரில நிறைய செஞ்சுருக்கானுவ. வருசா வருசம் நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாவில முன்னாடி நின்னு எல்லா காரியமும் இவனுகத் தான் பாப்பானுவ.."
"ம்.. சரி வரச்சொல்லுங்க. பயோடேட்டா முக்கியம். நான் முதல்ல பேசிப்பார்க்கிறேன்"
"ரொம்ப நன்றிங்க, நாளைக்கே வரச்சொல்றேன்."

- இது ஒரு சிறு உரையாடல். ஆனால் இந்த எண்ணம் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. ஜாதி என்பது ஒரு உதாரணம் தான். இந்த தூக்கிவிடலுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். அது சொந்த ஊர் என்பதாகவும் இருக்கலாம். தமிழ்நாடு என்பதாகவும் இருக்கலாம். இந்தியா என்பதாகவும் இருக்கலாம். உங்கள் கூட கிரிக்கெட் விளையாடியவர் என்பதாகக்கூட இருக்க முடியும்! என்னவாக இருந்தாலும், தனக்குத் தெரிந்தவரை தூக்கிவிட வேண்டும் என்ற நினைப்பில்லாத மனிதர்கள் மிகக் குறைவு.

சத்தியமாகத் தவறில்லை. இது மனித இயல்பு என்றே சொல்வேன். நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் இது போன்ற செயல்கள் மூலம் தூக்கிவிடத்தான் வேண்டும். ஆனால், இதையும் தாண்டிய ஒரு நிலை வேண்டும். அந்த நிலைக்கு கொஞ்சமே கொஞ்சம் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். அதைச் செய்ய முடியுமா?

--

அடுத்தவருக்கு உதவ ஒரு மனம் வேண்டும். கர்ணன் ஒரு கைக்கு தெரியாமல் மறு கை வழி தானம் செய்பவன் என்று சொல்வார்கள். ஏன் தெரியாமல் செய்ய வேண்டும்? தெரிந்து செய்வதில் தவறென்ன? மனிதனின் மிகப் பெரிய திமிர், கர்வம்- தான். இந்த கர்வம் வராமல் இருப்பதற்காகத்தான் இப்படி ஒரு செயல். ஒரு கையால் செய்யும் உதவி அடுத்த கைக்கு தெரிவது கூட தவறு என்பதைத்தான் இது சொல்கிறது.

உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது.. எப்படி முடியும்? முடிவது சுலபம்தானா? இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் உள்ள கேள்விகள்.

-


நீங்கள் ஏராளமான நண்பர்கள் உடையவரா? ஏன் ஏதேனும் செய்யக்கூடாது? ரொம்ப ஒண்ணும் இல்லை.

உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள். எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள சிறு சிறு இடங்களில் சின்ன அளவில் ஏதேனும் உதவி செய்ய இயலுமா என்று யோசியுங்கள்.

உதா: உங்களூர் பள்ளிக்கு ட்யூப் லைட் போடத்தேவையிருக்கலாம். (ட்யூப் லைட் வெளிச்சம் தெரியாத அளவுக்கு பெயிண்ட் அடிக்கிற வேலையெல்லாம் வேணாமே ப்ளீஸ்!)

உங்களூரில் அல்லது அருகிலுள்ள முதியோர் இல்லத்திற்கோ அல்லது அனாதை ஆசிரமத்திற்கோ உதவி செய்ய முயற்சிக்கலாம்.

ஒரு பொது காரியத்திற்கு - அது கொசு உற்பத்தி மையமான சாக்கடையை சுத்திகரிப்பதாகக் கூட இருக்கலாம் - நீங்கள் இறங்கிச் செய்ய வேண்டியதில்லை, செய்யக்கூடியவர்களை கண்டுபிடித்து பணம் கொடுத்து செய்யச் சொல்லலாமே!

உங்களுக்கு அவசியமென்றிருந்தால், இதெல்லாம் ஒரு போட்டோ எடுத்து, உங்கள் ஊர் நிருபரிடம் சொல்லி ஒரு வரி நாளிதழில் எழுதச் சொல்லுங்கள். இதிலும் சிறு உபயோகம் இருக்கிறது. ஆர்வமுள்ள பலர் உங்களைத் தொடர்பு கொள்ள இது உதவலாம்.

--

நம்மில் பலருக்கு ஏதேனும் பெரிய விதத்தில் பிரச்சனை ஏற்படும் போதுதான் உதவிக்குழுக்கள் பற்றி தெரியவரும். குஜராத், ஒரிசா, சுனாமி, காஷ்மீர் என்று இயற்கையோ அல்லது சீற்றத்தின் விளாசலோ தாக்கும் போது மட்டும்தான் தேசத்தின் வேதனை தெரியும்.

குறைந்த பட்சம், இந்த நேரத்திலாவது உதவி செய்வதற்கு தயங்கவே தயங்காதீர்கள்.

--

போன போட்டியில் ஒரு பதிவரால் எழுதப்பட்ட ஆக்கம் : தாயுமான தந்தையுமான திரு. உதவும் கரங்கள் 'திவாகர்' பற்றி தெரிந்து கொள்ள : http://www.udavumkarangal.org

சிவானந்த குருகுலம் - நல்ல பல காரியங்களை சிறப்பான முறையில் செய்துவரும் ஒரிடம் - இதனைப் பற்றி தெரிந்து கொள்ள :http://www.buildhope.org/

--
இணைய உபயோகம் என்று வந்துவிட்ட பிறகு கிரடிட் கார்ட் இல்லாமல் முடியுமா?

கீழ்கண்ட இரண்டு தளங்களும் கிரடிட் கார்ட் முறையில் பணம் பெற்றுக்கொள்கிறார்கள்.

https://www.cry.org/donor/crydonation.asp
http://www.giveindia.org

அன்பளிப்புப் பொருட்களுக்கு...

www.craftsbridge.com,
http://www.akanksha.org/

சில தளங்கள்:

http://www.ravixp.net/IVA/
AimsIndia.net

இணையத்தில் சிறு சோதனை செய்து உருவாக்கிய பகுதிதான் இது. நன்றிகள் அனைத்து கட்டுரைகளுக்கும்:

http://www.desikan.com/blogcms/?item=139
http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_16.html

---

இதெல்லாம் விடச் சுலபமான ஒரு வழி இருக்கிறது. உங்களைச் சுற்றி பலரும் ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கவனித்து வாருங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர் சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். தயங்காமல் அவரிடம் பேசி, உங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது என்பதனைத் தெரியப்படுத்துங்கள். அவசரமே இல்லை. கொஞ்சமே கொஞ்சம் ஒரு ஓரத்தில் இதெல்லாம் செய்யலாம் என்று தோன்றினாலே போதும்! உங்களுக்குள் எத்தனையோ சிந்தனைகள் ஊற்றெடுக்கும்!! அது யாரேனும் ஒருவருக்கேனும் வாழ்வில் ஏற்றம் பெற உதவி செய்வதாக அமையும்!

-
உபயம் : தேன்கூடு போட்டி.

5 comments:

மா.கலை அரசன் said...

Nalla Ennam Ungalukku. Nalla PAthivum kooda. Uthava ninaippavargalukku oru thoondugol thaan ungal pathivu.

பழூர் கார்த்தி said...

மிகவும் அருமையான நோக்கமுடைய படைப்பு ! பாராட்டுக்கள் !

***

போட்டிகளைத் தாண்டி எல்லாரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய படிப்பு, இந்த படைப்பு !!

Jazeela said...

எல்லோரும் சேர்ந்து தூக்கி விடுவோம்.

பழூர் கார்த்தி said...

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்

பழூர் கார்த்தி said...

யதா, கொஞ்சம் தாமதமாகி விட்டது..
இப்போது வெளியிட்டு விட்டேன் :-)

***

அடுத்த செட் தேன்கூடு விமர்சனங்களுக்கு இங்கே பாருங்கள் !!